CRIME
அவன்தான் என் தங்கச்சிய கொன்றுப்பான்..! யாருக்கும் கேட்காத துப்பாக்கிச் சத்தம்… கொண்டாட்டத்தின் நடுவே மர்மமாக சரிந்த தாய்..! பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!
பீகாரின் சமஸ்தீபூர் மாவட்டத்தில் உள்ள ஹலை காவல் எல்லைக்குட்பட்ட சக்லால்சாஹி கிராமத்தில், வீட்டிற்கு அருகே குழந்தையின் ‘சட்டி’ நிகழ்ச்சி விமரிசையாக நடந்துகொண்டிருந்தது. அனைவரும் அந்த விழாவில் மூழ்கியிருந்த நேரத்தில், சக்லால்சாஹியைச் சேர்ந்த சுராஜ் சகானி என்பவரின் மனைவி மஞ்சுளா குமாரி என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். விழாவின் சத்தத்திற்கு இடையே துப்பாக்கிச் சூடு சத்தம் யாருக்கும் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது.
காயமடைந்த பெண்ணை உடனடியாக அவரது குடும்பத்தினர் சமஸ்தீபூர் சதர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த டாக்டர் ஜிபச்ச சா, பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தார். இந்தச் சம்பவத்தால் அந்த கிராமத்தின் மகிழ்ச்சிச் சூழல் சோகமாக மாறியது. உயிரிழந்த பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கணவன் சுராஜ் சகானியே தன் தங்கையைச் சுட்டுக் கொன்றதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாகத் தங்கை திருமணத்தின் போது கணவனுடன் தகராறு ஏற்பட்டு, சுராஜ் தன் மனைவியை சுட்டுக் கொல்வதாக மிரட்டியிருந்ததாகவும் சகோதரர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கான துல்லியமான காரணம் இன்னும் தெளிவாகவில்லை.
