CRIME
“அய்யோ கொடுமையே..! நள்ளிரவில் ஜன்னலை உடைத்த அசுர சத்தம்.. வீட்டிற்குள் புகுந்து கரடி செய்த அந்த கொடூரமான காரியம்.. மரண பயத்தில் உறைந்த குடும்பம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள மவுண்ட் கிரெஸ்டட் பட் குடியிருப்பில், நள்ளிரவு நேரத்தில் கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்த ஆக்ரோஷமான காட்டுக்கரடி ஒன்று சமையலறையில் மாபெரும் தீ விபத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அங்கு சிக்கியிருந்த குடும்பத்தைக் காப்பாற்ற அதிகாரிகள் கரடியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விபரீதச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 19 அன்று இரவு, இல்லத்திற்குள் அசுரத்தனமாக நுழைந்த அந்தக் கரடி, வரவேற்பறை அலமாரிகளைச் சூறையாடிவிட்டுச் சமையலறையிலிருந்த மின்சார அடுப்பைத் தட்டிவிட்டுள்ளது. இதனால் அடுப்பு திடீரெனத் தீப்பிடித்து வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், மரண பயத்தில் இருந்த குடும்பத்தினர் அவசர உதவி எண்களைத் தொடர்பு கொண்டு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் கரடியை விரட்ட முயன்ற போது, அது அங்கிருந்து நகர மறுத்து உச்சக்கட்ட ஆக்ரோஷத்துடன் மனிதர்களைத் தாக்கப் பாய்ந்துள்ளது. இதனால் எரியும் வீட்டிற்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குடும்பத்தைப் பத்திரமாக மீட்க வேறு வழியில்லாமல், தீயணைப்புத் துறையினர் 1 நிமிடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி அந்தக் கரடியைக் கருணைக் கொலை செய்தனர். கரடி சரிந்து விழுந்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் அசுர வேகத்தில் தீயை அணைத்து உள்ளே சிக்கியிருந்த ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் மாஸ் ஆக்ஷன் மூலம் பத்திரமாக மீட்டனர்.
