LATEST NEWS
“எல்லோரோட வாழ்க்கையும் இங்க ஈஸி இல்ல..” நடு ரோட்டுல தாய் வியாபாரம் பண்ணும்போது மகள் செஞ்ச காரியம்… நெஞ்சைத் தொடும் வைரல் வீடியோ..!!
சோஷியல் மீடியாவில் சில நொடிகளிலேயே மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல வீடியோக்கள் தினமும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு சிறுமி சாலை ஓரத்தில் தரையில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், வீதியில் வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டும், மக்கள் நடமாட்டம் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால், இந்த எந்தக் இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் அந்தச் சிறுமி தனது கையில் உள்ள நோட்டுப் புத்தகத்தில் எழுதுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறாள். அவளது அருகில் ஒரு பள்ளிப் பையும் வைக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை கூர்ந்து கவனித்தால், சிறுமியின் அருகே அவளது தாயும் அமர்ந்திருப்பது தெரிகிறது. அநேகமாக அந்த தாய் சாலை ஓரத்தில் ஒரு சிறிய கடை வைத்தோ அல்லது ஏதேனும் பொருட்கள் விற்றோ வியாபாரம் செய்து கொண்டிருப்பார் போலத் தோன்றுகிறது. தாய் தனது வேலையைச் செய்து கொண்டிருக்க, சிறுமி அந்த இடத்தையே தனது படிப்புக்கான இடமாகப் பயன்படுத்திக் கொள்கிறாள். அமைதியான அறையோ, மேஜை-நாற்காலியோ அல்லது படிப்பதற்கான வசதிகளோ இல்லாத போதிலும், வீதியின் இரைச்சலுக்கு மத்தியில் அச்சிறுமி காட்டும் அர்ப்பணிப்பும் கவனமும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
https://www.instagram.com/reel/DdSv61aISJJ/?utm_source=ig_web_button_share_sheet
மேலும், இந்த வீடியோவில் “Life is not easy for everyone” என்ற வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வசதியான சூழ்நிலை இல்லாவிட்டாலும், கிடைத்த இடத்தையும் நேரத்தையும் பயன்படுத்தி அந்தச் சிறுமி படிக்கும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்த பல பயனர்களும் சிறுமியின் விடாமுயற்சியையும் துணிச்சலையும் வெகுவாகப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்தச் சில நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் மக்களின் இதயங்களை வென்று சிந்திக்கும்படி செய்துள்ளது.
