LATEST NEWS
பெரும் பரபரப்பு..! கரூர் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசுப்பணி… டெல்லிக்கு பறந்த திமுகவின் அவசரக் கடிதம்..!!
கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுவதை எதிர்த்து திமுக தலைமை டெல்லிக்கு முக்கியக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. கரூர் விபத்து வழக்கின் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகிக்கு திமுக இந்த அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்பியுள்ளது. தவெக அரசின் முதலமைச்சர் விஜய், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை இன்று வழங்க உள்ள சூழலில் இந்த அதிரடி நகர்வை திமுக மேற்கொண்டுள்ளது.
அரசு தரப்பில் வழங்கப்படும் இந்தச் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் வழக்கின் போக்கைத் திசைதிருப்பலாம் என்ற கவலையை திமுக அக் கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளாக இருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது தற்போதைய அரசு எந்தவிதமான செல்வாக்கையும் செலுத்தக் கூடாது என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. விசாரணையின் முக்கியக் கட்டத்தில் இத்தகைய அறிவிப்புகள் வெளியாவது, சிபிஐ விசாரணையின் சுதந்திரம் மற்றும் அதன் நியாயத்தன்மை மீது பொதுமக்களுக்குப் பெரிய சந்தேகத்தை எழுப்பும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழக்கில் நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என திமுக கோரியுள்ளது. மேலும், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தவெக அரசு எந்தவொரு மறைமுக அழுத்தத்தையோ அல்லது செல்வாக்கையோ செலுத்தாதவாறு தகுந்த கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் அக் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
