CRIME
“கேஸை வாபஸ் வாங்கு இல்லனா கொன்றுவிடுவோம்..!” ஐஐடி பட்டதாரியின் குடும்பத்த்தை கொடூரமாக தாக்கிய ரவுடி கும்பல்.. கைகட்டி வேடிக்கை பார்க்கும் லோக்கல் போலீஸ்.. பதறவைக்கும் பிண்ணனி..!!
பீகார் மாநிலம் நவாடாவில், ஐஐடி பாட்னாவில் பட்டம் பெற்ற இமான்ஷு ராஜ் என்பவரது குடும்பத்தினர் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் கொலைவெறித் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், அந்த வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும் சமரசத்திற்கு வர வற்புறுத்தியும் அவர்கள் மீது மீண்டும் ஒருமுறை கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இமான்ஷு ராஜின் சகோதரி கூட குறிவைத்துப் பாய்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தக் குடும்பத்தினரின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தபோதிலும், உள்ளூர் காவல் நிலையப் போலீசார் குற்றவாளிகள் மீது எந்தவொரு கடுமையான அல்லது பயனுள்ள சட்ட நடவடிக்கையையும் எடுக்காமல் மௌனம் காப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் இந்த மந்தமான போக்கைப் பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள் அநாகரிக அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஐஐடி பட்டதாரி குடும்பத்திற்கே பாதுகாப்பு இல்லாத இந்த நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
