LATEST NEWS
என் மாப்பிள்ளை சீமான் மட்டும்.. 2 மாசத்துக்கு முன்னாடி இதை செஞ்சிருந்தா தமிழ்நாட்டு கதையே வேற… மேடையில் போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்… அலறும் அரசியல் வட்டாரம்!!
நெல்லையில் நடைபெற்ற பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் பிறந்தநாள் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்றனர். இத்தலைவர்களின் வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மேடையில் இருந்த தலைவர்களைச் சுட்டிக்காட்டி நகைச்சுவையாகவும் அதேவேளையில் அரசியல் உள்நோக்கத்துடனும் கருத்துத் தெரிவித்தார். “இந்த மேடையில் மாப்பிள்ளை சீமான் உள்பட எல்லோரும் அமர்ந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணி அல்லது கூட்டம் இரண்டு மாதங்களுக்கு முன்பே அமைந்திருந்தால் தமிழக அரசியலின் போக்கே மாறியிருக்கும். இனிமேலாவது அவர் வருகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்று சீமானை மறைமுகமாக பாஜக கூட்டணிக்கு அழைக்கும் வகையில் பேசினார்.
அரசியல் களத்தில் முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட தலைவர்கள் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டதும், சீமானை நோக்கி நயினார் நாகேந்திரன் விடுத்த இந்த மேடை அழைப்பும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கூட்டணிக் கணக்குகள் குறித்த புதிய ஊகங்களுக்கு இந்த நிகழ்வு வழிவகுத்துள்ளது.
