LATEST NEWS
“பாண்டிச்சேரி டூ தமிழ்நாட்டுக்கு Import ஆனவர் நீங்க” ஜெயலலிதாவுக்கே இந்த கதிதான்… அமைச்சர் ஆனந்துக்கு ஆர்.எஸ்.பாரதி ஆவேச பதிலடி..!!
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என்று அமைச்சர் ஆனந்த் விமர்சித்ததற்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ‘இம்போர்ட்’ செய்யப்பட்ட அவருக்கு, தமிழகத்தின் ஆழமான அரசியல் வரலாறு எதுவும் தெரியாது என்று அவர் சாடியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதே போன்ற கருத்துக்களைக் கூறி, அடுத்த தேர்தலிலேயே மக்களால் தோற்கடிக்கப்பட்டதை ஆர்.எஸ்.பாரதி சுட்டிக்காட்டியுள்ளார். திமுகவின் நீண்ட கால வரலாற்றையும், அதன் அரசியல் பயணத்தையும் முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பிறகு அமைச்சர் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது பல சோதனைகளைக் கடந்து மக்கள் செல்வாக்குடன் விளங்கும் இயக்கம் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இதுபோன்ற விமர்சனங்கள் திமுகவின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
