LATEST NEWS
“அந்த பேச்சுக்கே இடமில்லை” திமுகவை மண்ணை கவ்வ வைக்கணும்… தவெக போட்ட மாஸ்டர் பிளான்.. இப்போதே களமிறங்கிய முதலமைச்சர் விஜய்..!!
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்வதற்கான வியூகங்களை, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக இப்போதே தீவிரமாகத் தொடங்கியுள்ளது. மீண்டும் ‘மைனாரிட்டி’ என்ற பேச்சுக்கே இடம் கொடுக்கக் கூடாது என்பதில் தவெக தலைமை மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் கூட்டணிக் கணக்குகளைப் பலப்படுத்தும் முதற்கட்ட நடவடிக்கையாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 மேயர் பதவிகளை வழங்கத் தவெக முன்வந்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து கட்சிகளைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் தவெகவின் இந்த ஆரம்பகட்ட நகர்வு, தற்போதைய அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்கூட்டியே தேர்தல் பணிகளை முதலமைச்சர் விஜய் முடுக்கிவிட்டுள்ள இந்த அதிரடித் திட்டம், ஒட்டுமொத்த தமிழக அரசியல் அரங்கின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்த தவெக திட்டமிட்டு வரும் நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்க திமுகவும் தனது அடுத்தகட்ட வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது.
