LATEST NEWS
“இதுக்குத்தான் ‘சிங்கப்பெண்’ படை தேவை..!” ஒரே வாரத்தில் 346 புகார்களுக்குச் சவுக்கடி.. சத்தமின்றி நடந்த தரமான சம்பவம்.. அலறும் குற்றவாளிகள்..!!
தமிழ்நாடு காவல்துறையால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்தப் படை, பெறப்பட்ட 346 புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு கண்டுள்ளதுடன், தீவிரமான சட்டமீறல்கள் நிலவிய 28 வழக்குகளில் முறையான குற்றவியல் வழக்குகளையும் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பிற உள்ளூர் காவல் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு காணாமல் போன 14 குழந்தைகள் மற்றும் 6 பெண்கள் உட்பட 20 பேரை மீட்டு அவர்களின் குடும்பங்களுடன் சேர்த்து நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றத் தடுப்பு நடவடிக்கைகளோடு நிற்காமல், சமூகம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் சிங்கப்பெண் படை முன்மாதிரியாகத் திகழ்கிறது. பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 3,580 விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, பாதுகாப்பு உரிமைகள் மற்றும் அவசரகால உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய 51 சிறுவர், சிறுமிகளைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்து புதிய வாழ்வை அளித்துள்ள இந்தச் சிறப்புப் படையின் நடவடிக்கை, மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
