அப்பவே 13 பேர் பலி.. மக்கள் கொண்டாடும் குணா குகை அந்த காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா..? நடுங்க வைக்கும் வீடியோ இதோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அப்பவே 13 பேர் பலி.. மக்கள் கொண்டாடும் குணா குகை அந்த காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா..? நடுங்க வைக்கும் வீடியோ இதோ..!!

Published

on

சந்தான பாரதிய இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான குணா படம் 1991-ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ரோஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவன் தன்னை சிவனாக நினைத்துக் கொண்டு கோவிலுக்கு வரும் ஒரு பெண்ணை பார்வதி என நினைத்து திருமணம் செய்வதற்காக கடத்தி செல்கிறான்.

பின்னர் மலை உச்சியில் இருக்கும் ஒரு வீட்டில் அந்த பெண்ணை அடைத்து வைக்கிறான். ஒரு பக்கம் பெண்ணின் சொத்துக்களை அபகரிக்க நினைக்கும் கூட்டமும், மற்றொரு பக்கம் போலீஸ் அதிகாரிகளும் அந்த பெண்ணை தேடி வருகிறார்கள். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் கதை. இந்த படத்தில் கமல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்றது என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

Advertisement

இந்த நிலையில் இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சௌபின் சாகிர் ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட நடிகர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது எங்கு பார்த்தாலும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு குணா குகையும், கண்மணி அன்போடு காதலன் பாடலும் மக்கள் மத்தியில் மீண்டும் கொண்டாடப்படுகிறது. இதன் நிலையில் இப்போது மக்கள் அனைவரும் கொண்டாடும் குணா குகை முதலில் எப்படி இருந்தது என்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் நபர் ஏற்கனவே 13 பேர் உள்ளே விழுந்து இறந்திருக்கிறார்கள். பக்கத்தில் செல்லாதீர்கள் எனக் கூறுகிறார். அந்த இடத்தை பார்க்கவே பயங்கரமாக உள்ளது. இதோ அந்த வீடியோ..

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in