CRIME
“ஒரே அடியில் முடிந்த உயிர்!”.. பெற்ற தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்.. இறுதியில் முடிந்த சோகம்… பெங்களூருவை உலுக்கிய சம்பவம்..!!
பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த நேபாளத்தைச் சேர்ந்த 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின் காலிகோட் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திர ஷாஹி மற்றும் அவரது மகன் துரோணா பகதூர் ஷாஹி ஆகியோர் முன்னதாகக் கிழக்கு பெங்களூருவின் சோமாபுரா கேட் பகுதியில் பாதுகாவலர்களாகப் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், சந்திரா வெள்ளிக்கிழமை அன்று ஒரு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பில் பாதுகாவலராகப் பணியில் சேர்ந்த நிலையில், அவரது மகன் துரோணா ஞாயிற்றுக்கிழமை அங்கு வேலை தேடிச் சென்றுள்ளார்.
அங்கு இரவு 7 மணியளவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த துரோணா, தந்தை சந்திராவை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சந்திரா உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் விக்டோரியா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், திங்கட்கிழமை அதிகாலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வர்த்தூர் காவல் துறையினர் துரோணாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
