CRIME
“மனித மிருகமா நீங்க..?!” குழந்தைகளை சீரழித்து வீடியோ போட்ட கொடூரம்.. பராமரிப்பாளர் செய்த வெறிச்செயல்.. நீதிபதி கேட்ட அந்த ‘ஒரே’ கேள்வி..!!
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் அமைந்துள்ள பீச்வுட் நகரைச் சேர்ந்த 26 வயதான மோலி எலிசபெத் டங்கன் என்ற குழந்தை பராமரிப்பாளர் தான் பராமரித்து வந்த இரண்டு கைக்குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் அதிரடித் தண்டனைகளைப் பெற்றுள்ளார். 10 வருடங்கள் குழந்தை பராமரிப்பு அனுபவம் கொண்ட இவர், போர்டேஜ் மற்றும் ஜியோகா ஆகிய மாவட்டங்களில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது இந்த அட்டூழியங்களை அரங்கேற்றியுள்ளார். மேலும், அவற்றை தனது கைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்து, சமூக வலைத்தளங்கள் வழியாக பிற குற்றவாளிகளுடன் பகிர்ந்துகொண்டதும் தடயவியல் விசாரணையில் அம்பலமானது.
இவ்வழக்கில் வழங்கப்பட்டத் தீர்ப்புகள் மூலம் மோலி தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியைக் சிறையிலேயே கழிக்கவுள்ளார். ஜியோகா கவுண்டி தொடர்பான கூட்டாட்சி வழக்கில்கடந்த ஜூலை 22 அன்று இவருக்கு 70 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், $28,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூலை 24 அன்று போர்டேஜ் கவுண்டி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நீதிபதி லாரி பிட்மேன் மோலிக்கு பரோல் வாய்ப்பே இல்லாத 4 தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகளை விதித்துத் தீர்ப்பளித்தார். விசாரணையின் போது நீதிபதி, “சரி என்று நினைக்கும் அளவுக்கு உன் வாழ்க்கையில் என்னதான் நடந்தது?” என்று மோலியை நோக்கிக் கடுமையான கேள்வியை எழுப்பினார்.
இந்த விசாரணையின் போது பாதிக்கப்பட்ட ஒருகுழந்தையின் தாய் மன்றத்தில் கூறுகையில், “உலகில் தீமைக்கு ஒரு பெயர் இருக்கிறது என்றால் அது மோலிதான்” என்று கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார். தன் செயல்களுக்கு மனநலப் போராட்டங்கள் மற்றும் தனக்கேற்பட்ட தனிப்பட்ட பாதிப்புகளே காரணம் எனக்கூறி மோலி மன்னிப்பு கோரிய போதிலும், நீதிமன்றம் இத்தகைய கொடூரக் குற்றங்களுக்கு இரக்கம் காட்ட மறுத்துவிட்டது. குழந்தைகள் மற்றும் சிறார்களைப் பாலியல் சுரண்டலிலிருந்து பாதுகாக்கும் Project Safe Childhood திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த விசாரணையின் முடிவு, குழந்தைகளைப் பராமரிப்பில் ஒப்படைக்கும் பெற்றோருக்கு விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் ஊட்டுவதாக அமைந்துள்ளது.
