CRIME
அடக்கடவுளே..! “வண்டியை ஒழுங்கா ஓட்டு” இந்த ஒரு வார்த்தை சொன்னதுக்கு நடுரோட்டில் கொலை வெறித்தாக்குதல்… வெறிபிடித்த கும்பல் செய்த பகீர் சம்பவம்…!!
மகாராஷ்டிர மாநிலம் புனேயின் பானேர் பகுதியில், சாலையில் நடக்கும் ஒரு சிறிய வாக்குவாதம் எத்தகைய பயங்கரமான அசம்பாவிதத்தில் முடியும் என்பதற்கு சான்றாக ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஒரே இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறிச் சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல், சாலையில் பயணித்த ஒரு வாலிபரின் வாகனம் மீது உரசியபடி கடந்து சென்றுள்ளது. நிலைதடுமாறிய அந்த வாலிபர், “வாகனத்தை ஒழுங்காக ஓட்ட மாட்டிங்களா?” என இயல்பாகக் கேட்டுள்ளார்.
சிறிய தவறைச் சுட்டிக்காட்டிய அந்த ஒற்றைக் கேள்வி, அந்தப் போக்கிரி கும்பலுக்கு மிதமிதித்த ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, தட்டிக்கேட்ட அந்த வாலிபருடன் சாலையில் வைத்துப் பயங்கரமாக மல்லுக்கட்டியுள்ளனர். வாக்குவாதம் முற்றிய சூழலில், ஆத்திரத்தில் கண்மண்ணு தெரியாமல் அந்த வாலிபர் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கூர்மையான ஆயுதங்களாலும் கைகளாலும் அந்த வாலிபரைச் சரமாரியாகத் தாக்கியதில், அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். வாலிபரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், அவரை உடனடியாக மீட்டு அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புனே காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து தீவிர வேட்டை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். ஒரு சிறிய தகராறுகாகச் சாலையில் வைத்து இளைஞரை மிருகத்தனமாகத் தாக்கிய இந்தச் சம்பவம் புனே நகரில் கடும் பீதியைக் கிளப்பியுள்ளது.
