பகீர்..! வீட்டிற்கு வெளியே தூங்கிய பெண்… காலையில் எழுந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. நைசாக கழுத்தில் இருந்த நகையை தூக்கிட்டு ஓடிய மர்ம நபர்… போலீஸ் வலைவீச்சு..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்..! வீட்டிற்கு வெளியே தூங்கிய பெண்… காலையில் எழுந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. நைசாக கழுத்தில் இருந்த நகையை தூக்கிட்டு ஓடிய மர்ம நபர்… போலீஸ் வலைவீச்சு..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர் சேட்டு மனைவி செல்வி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கினார். மறுநாள் காலை எழுந்தபோது கழுத்தில் அணிந்திருந்த 3.25 பவுன் தாலி சங்கிலியை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்ததை நோட்டமிட்ட யாரோ மர்மநபர் நைசாக கழுத்தில் அணிந்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in