LATEST NEWS
“என்னை நீக்க அதிகாரமே இல்லை!”.. தவெக-வில் வெடித்த உட்கட்சி பூசல்.. மாவட்ட செயலாளருக்கு எதிராக ஞானசௌந்தரி அதிரடிப் பேட்டி..!!
விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தவெக நிர்வாகி ஞானசௌந்தரி, கட்சியின் கொள்கை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி இன்று காலை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நீக்க உத்தரவை விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் பிறப்பித்திருந்த நிலையில், தன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஞானசௌந்தரி இதற்குப் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தன்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு மாவட்ட செயலாளருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும், இந்த நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது என்றும் அவர் தனது பேட்டியில் வாதிட்டுள்ளார்.
மேலும், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் அவர்கள் எப்போதும் ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தையே வலியுறுத்தி வருவதாகவும், அவரின் அந்த தூய்மையான கொள்கையின் மீதுள்ள ஈர்ப்பால் மட்டுமே தான் நீதிமன்றத்தை நாடியதாகவும் ஞானசௌந்தரி சுட்டிக்காட்டியுள்ளார். தவெகவின் உட்கட்சி பூசலையும், அமைச்சர் மீதான ஊழல் புகாரையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள இந்த விவகாரம், விழுப்புரம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தவெக கட்சியினரிடையேயும் தற்போது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
