LATEST NEWS
நிஜத்திலேயே திருமணம் முடிக்கும் சீரியல் ஜோடி…. நிச்சயதார்த்த புகைப்படத்தை பார்த்து வாழ்த்தும் ரசிகர்கள்….!!!
விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி 2 சீரியலில் நடித்தவர் தான் பிரிட்டோ. அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் சீரியலில் நடித்தார். அதன் பிறகு தற்போது ஜீ தமிழில் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வருகின்றார். அந்த சீரியலில் மலராக நடித்து வருகிறார் சந்தியா ராமச்சந்திரன். இதில் பாண்டி மற்றும் மலர் ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.
இவ்வாறு சீரியலில் ஜோடியாக இருக்கும் சந்தியா ராமச்சந்திரன் மற்றும் பிரிட்டோ இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஒன்றிணை உள்ளனர். அவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கடந்த ஜனவரி 25ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக புகைப்படத்தை வெளியிட்டு அவர்கள் அறிவித்துள்ள நிலையில் அந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க