CRIME
ஐயோ கடவுளே..! எம்.பி மகன் செய்த கொடூர காரியம்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. ஹைதராபாத் சாலையில் அரங்கேறிய பயங்கரம்..!!
ஹைதராபாத் மாதப்பூரில் உள்ள இன்ஆர்பிட் மால் அருகே அதிவேகமாகவும், அலட்சியமாகவும் சொகுசு காரை ஓட்டி பெண் ஒருவரின் மரணத்திற்கு காரணமானதாக, ஜனசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கமனேனி ரமேஷின் மகன் லிங்கமனேனி சஞ்சுஷ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 16, 2026 அன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணான பாரதி முகி, இன்ஆர்பிட் மாலில் உள்ள லைஃப்ஸ்டைல் கடையில் விற்பனைப் பெண்ணாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது சக ஊழியருடன் மதிய உணவு வாங்கிக்கொண்டு மாலுக்கு எதிரே சாலையைக் கடக்க முயன்றபோது, சஞ்சுஷ் ஓட்டி வந்த ஆஸ்டன் மார்ட்டின் சொகுசு கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பாரதி முகி, உடனடியாக ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
MP’s 21-year-old son Accused of Driving at High Speed and in a Rash and Negligent Manner and Hit a woman, to Death, near Inorbit Mall, #Madhapur , #Hyderabad
Newly elected Janasena Party MP Lingamaneni Ramesh’s son, Lingamaneni Sanjjush (21) booked for allegedly driving an… pic.twitter.com/AHwpa91egA— Surya Reddy (@jsuryareddy) August 20, 2026
இந்தச் சம்பவம் தொடர்பாக மாதப்பூர் காவல் நிலையத்தின் தற்போதைய தலைமை காவல்துறை அதிகாரி கே.வி. சுப்பாராவ் தலைமையிலான போலீசார், பாரதி முகியின் மரணத்திற்கு காரணமான குற்றவாளியை லிங்கமனேனி சஞ்சுஷ் என அடையாளம் கண்டுள்ளனர். பாரதியுடன் சென்ற சக ஊழியரின் புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 106(1)-ன் கீழ் குற்ற எண் 1238/2026 ஆக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய சஞ்சுஷ் உடனடியாக பிடிக்கப்பட்டு, அவர் மது அல்லது போதைப்பொருள் உட்கொண்டிருந்தாரா என்பதை கண்டறிய இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
