DISTRICT NEWS
“20 வருஷமா உழைச்ச என் மகனை ஏன் கூப்பிடல?”.. தவெக எம்.எல்.ஏ-வை நடுத்தெருவில் அலறவிட்ட தாய்… தருமபுரியில் பரபரப்பு..!!
தர்மபுரி தவெக கூட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், கட்சிக்குள் புகைந்து கொண்டிருக்கும் உள்ளூர் அரசியல் பூசலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மக்கள் நலப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒருபுறம் சுமுகமாகத் தொடங்கினாலும், மேடையில் நடந்த விபரீதம் யாரோடும் எதிர்பார்க்காத ஒன்று. தன் மகன் 20 வருடங்களாகத் தலைவர் விஜய்க்காக உழைத்தும், தற்போதைய முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்டதை ஒரு தாயால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பாதுகாப்புப் பணியினரையும் மீறி, மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ-வை நோக்கி அந்தத் தாய் பாய்ந்ததும், “என் மகனை ஏன் ஓரங்கட்டினீர்கள்?” என்று ஆவேசக் குரல் எழுப்பியதும் கூட்டத்தையே அதிர வைத்தது.
இந்தத் திடீர் ஸ்பாட் ஆக்ஷன், தவெக தலைமைக்கு தர்மபுரி நிர்வாகிகள் விடுத்துள்ள ஒரு பகிரங்க சவாலாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தாய்-எம்.எல்.ஏ வாக்குவாதத்தால் செய்வதறியாது திகைத்த சக நிர்வாகிகள், அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்தி மேடையில் இருந்து கீழே அழைத்துச் சென்றனர். தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதலே பல்வேறு மாவட்டங்களிலும் ஆரம்பக்கால விசுவாசிகளுக்கும், அண்மையில் கட்சியில் இணைந்த புதிய நிர்வாகிகளுக்கும் இடையே பதவிகள் மற்றும் முக்கியத்துவம் அளிப்பதில் உட்கட்சிப் பூசல்கள் வெடித்து வரும் நிலையில், இச்சம்பவம் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தவெக தலைமை மற்றும் புஸ்ஸி ஆனந்த் தரப்பு, தர்மபுரி மாவட்ட உட்கட்சி விவகாரங்கள் குறித்து உடனடியாக விரிவான அறிக்கை கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
